நற்கருணை ஆண்டவரின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்துங்கள்: திருத்தந்தை

0

நற்கருணை ஆண்டவரைத் தொடர்ந்து ஆராதிக்கும் சகோதரிகள், தங்களின் நற்கருணை ஆன்மிக வாழ்வை ஆழப்படுத்தி, செபம், பணிகள் மற்றும் சகோதரத்துவப் பகிர்வு வழியாக ஒன்றிப்பின் சாட்சிகளாகத் திகழ வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பர் 05, சனிக்கிழமையன்று, தூய ஆவியார் கூட்டமைப்பின் 50-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மனுவுருவாதலின் அருளாளர் மரியா மக்தலேனாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இத்தாலியில் திருப்பயணம் மேற்கொண்டுள்ள தூய நற்கருணையின் சபை சகோதரிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு  திருத்தந்தை கூறினார்.

அவர்களின் அர்ப்பணிப்பு வாழ்வை “இறைவனின் அளவற்ற கொடைத்தன்மைக்கான ஒளிமிகு சாட்சி” என்று  குறிப்பிட்ட திருத்தந்தை, மனித உள்ளத்தில் இறைவனின் திருமுகத்தைத் தேடவும், தியானிக்கவும் எழும் ஆழ்ந்த ஏக்கத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ச்சியான, அமைதியான நற்கருணை ஆராதனைக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள அவர்களின் அழைப்பைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ‘கிறிஸ்துவில் இறைமக்களை ஒன்றிணைக்கும் நற்கருணையானது, அன்பில் திருஅவை ஒன்றிப்பின் ஆன்மிக வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறது’ என்று கூறினார்.”

Leave A Reply

Your email address will not be published.