புனித திருமுழுக்கு யோவான் எழும்புகள்

0

2010ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, பல்கேரியாவின் கருங்கடல் கடற்கரையில், சோசோபோல் (Sozopol) நகருக்கு அருகிலுள்ள ஸ்வேதி இவான் (Sveti Ivan – “புனித யோவான்”) தீவில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின்போது, ஒரு பழமையான கிறிஸ்தவ மடத்தின் தேவாலயப் பலிபீடத்தின் கீழ், பளிங்குக் கல்லால் ஆன பெட்டியொன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த தேவாலயம் கி.பி. 4–5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது புனித திருமுழுக்கு யோவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அந்தப் பெட்டியின் அருகில், கிரேக்க மொழிக் கல்வெட்டுடன் கூடிய இன்னொரு சிறிய கல் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டில் திருமுழுக்கு யோவானின் பெயரும், ஜூன் 24ஆம் திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24 என்பது புனித திருமுழுக்கு யோவான் பிறந்த திருநாள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் இன்றும் அதே திகதியில் புனிதருடைய அற்புதமான பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

பெட்டி திறக்கப்பட்டபோது, மொத்தம் ஒன்பது எலும்புத் துண்டுகள் கிடைத்தன. அவற்றில் ஆறு மனித எலும்புகளும், மூன்று விலங்குகளின் எலும்புகளும் ஆகும்.

மனித எலும்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு (Radiocarbon Dating), அது கி.பி. 5 முதல் 75 வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியது. இது புனித திருமுழுக்கு யோவான் வாழ்ந்த காலத்துடன் பொருந்துகிறது.

மேலும், அந்த எலும்புகளில் இருந்து DNA எடுத்து, விஞ்ஞானிகள் மரபணு ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், அந்த நபர் மத்திய கிழக்கு (Middle East) பகுதியைச் சேர்ந்த ஆணாக இருக்கக்கூடும் என்று தெரியவந்தது.

இதுவும் புனித திருமுழுக்கு யோவானுடன் நன்றாகவே பொருந்துகிறது. அவர் யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊரில் பிறந்தார். அன்றைய யூதேயா, இன்று மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளைச் சுற்றியிருந்தது.

புனித திருமுழுக்கு யோவானின் திருப்பண்டங்கள் பின்னர் சோசோபோலில் உள்ள புனித சிரில் மற்றும் புனித மெத்தோடியுஸ் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பக்தர்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.